கருப்பு தான் எனக்குப் பிடித்த கலரு என்று ஒரு பாட்டு பாடி அனுராதாஸ்ரீராம் சினிமாவுக்குள் எண்ட்ரி ஆயிட்டாங்க... [ஆனா அவங்க கலர் ஒன்னும் கருப்பு கிடையாது... நல்ல கலர் தான்]
ஆனா அந்தப் பாட்டில் கருப்பா இருக்கும் எல்லாத்தையும் புடிச்சி ஒரு பெரிய்ய்ய்ய லிஸ்டே போட்டிருப்பாங்க...
எல்லாத்தையும் தூக்கிக் சாப்பிடும் ஒரு டயலாக் வடிவேல் காமெடியில் வரும்
அவன் பயங்கர கருப்பா இருப்பான்
ஆனா நீ கருப்பா பயங்கரமா இருக்கே...
எது எப்படியோ கருப்புக்கு நம்மாளுங்க இவ்வளவு வக்காலத்து வாங்கினாலும் மார்க்கெட்டில் அதன் வேல்யூ கம்மி தான். அது கல்யாணமாய் இருந்தாலும் சரி வேறு எதுவாய் இருந்தாலும் சரி..
சுனாமி வந்த ஞாயிறை கருப்பு ஞாயிறு என்று தான் சொல்கிறார்கள்...
சுனாமியை நேரில் பாத்த நமக்கு அப்படி ஒன்றும் அது அவ்வளவு கருப்பானதாய் தெரியலை...
இங்கே ஒரு கருப்பு பத்திய கம்பேரிஷன் வருது.. கொஞ்சம் பாக்கலாமே...
1. அது தொட்டு உணரக் கூடியதாய் இருந்தது
2. ஒரு விம் பார் போட்டு கழுவினா... பாத்திரமே விம் பார் மாதிரி ஆயிடுமாம்.. (அடே.. இதுவும் ஒரு கின்னஸ் ரெக்கார்ட் மாதிரி இருக்கே... )
3.பல கருப்புத் தூண்கள் மாதிரி
4. ஒரு மரத்தை வெட்டுவது மாதிரி (தேவைப்பட்டால்) வெட்டக் கூடியதாய் இருந்திச்சாம்...
5. இத்தனைக்கும் பின்னாடி... பாக்குறதுக்கு சூப்பரா ...இனியதாய் இருந்திச்சாம்...
இது எப்படி இருக்கு???
சிதையைப் பத்தி கேட்ட மாத்திரத்தில் ராவணன் வீட்டில் வந்த இருள் இப்படி இருந்ததாம்...
ஒரு சின்ன திருத்தம்... வந்த இருள் அல்ல... வரவழைக்கப் பட்ட இருள்.....
ஆமா... நான் ஆணையிட்டால் அந்த பிறை மறைந்து விட்டால் ... ரேஞ்ச்சில் இராவணன் பாடாமல் ஆணை இட, பிறை அப்படியே மரை கலண்டு போய் ஓட...இருள் வந்ததாம்...
இது கம்பனின் கற்பனை...
இதெல்லாம் எங்கே கம்பன் சொன்னான் ??? சும்மா சரடுன்னு .. யாராவது கேக்கிறீங்களா...??
அப்போ பாட்டும் போட்டுடறேன்... அரத்தம் புரிஞ்ச்சா படிங்க...இல்லாட்டி... அடுத்த மெயிலு படிங்க...
ஆண்டு அப்பிறை நீங்கலும் எய்தியது அந்தகாரம்
தீண்டதற்கு எளிது ஆய் பல தேய்ப்பன தேய்க்கல் ஆகி
வேண்டின் கரபத்திரத்து ஈர்த்து விழுத்தல் ஆகி
காண்டற்கு இனிதாய் பல கந்து திரட்டல் ஆகி
கதை கந்தல் ஆன மாதிரி ஏதோ கம்பர் சொல்ற மாதிரி இருக்கு இல்லே...???
மீண்டும் சந்திப்போம்
கம்பனைத் தெரியாத தமிழன் இருந்து விட முடியாது.. தமிழ்ப் பாட நூல் தாண்டி கம்பன் வரவேண்டுமென்றால் அது கம்பன் கழகம் போன்ற இயக்கங்களால் தான் சாத்தியமாக உள்ளது. கம்பனை ஒரு பாமரன் பார்வையில் அணுக முடியுமா என்று அந்தமான் தீவில் இருந்து யோசித்தேன். அந்தமான் + இராமாயணம் = அந்தாயணம் . கம்பன் சொன்ன சேடிகளை எல்லோர்க்கும் சொல்லும் ஒரே நோக்கம் தான் இங்கே... சில மனசைத் தொடலாம். சில சுடவும் செய்யலாம்.. எல்லாப் புகழும் கம்பனுக்கே.. வாருங்கள்... என் சொந்தத் தறியில் கம்பனின் நூலிழைகள் அங்கங்கே கிடைக்கும்.
Saturday, July 9, 2011
பாசக்காரப் பயலுவ
ஒரு படத்தில் நடிகர் கார்த்திக் & ரமேஷ் கண்ணா டீம், செம காமெடி செய்வார்கள் .... ஒரு கோவிலுக்குள்.. ஞாபகம் இருக்கா??
கார்த்திக் கையில் திருடின ஒரு உண்டியல். சாமி முன்னாடி விபூதி வச்சி ஒரு வட்டம் போடுவார். உண்டியல் காசெல்லாம் தூக்கி போட்டு, வட்டத்துக்குள் விழும் காசு எல்லாம் சாமிக்கு. மிச்சம் மீதி கொஞ்ச்சமா ஏதோ இருந்தா ..அது எனக்கு..என்பார் கார்த்திக்...
அதுக்கு பதிலுக்கு... ரமேஷ், சாமி .. உன்னையெல்லாம் ஒரு வட்டத்துக்குளே கொண்டு வர நான் விரும்பல்லே.. நானு எல்லாத்தையும் தூக்கி போட்றேன். உனக்கு வேணும்கிற எல்லாத்தையும் எடுத்துக்க.. எனக்கு ஏதோ கொஞ்ச்சம் குடு என்பார்..
சாமியை ஆசாமிகள் படுத்தும் பாடு.... படாத பாடு தான்.
சமீப காலமா கோவில் குளங்க்களில் கூட்டம் அதிகமா தென்படுது.. அதுவும் சிறப்பு பூஜைளில் சனி பகவான், குரு பகவான் இத்யாதி பூஜைகள் இன்னும் தடபுடலா நடக்குது.. வழிபாடுகளை விட பிராயசித்த தலங்கள் தான் இப்போ ரொம்ப பாப்புலர்.
என்ன வென்னாலும் தப்பு பன்னலாம். காசிக்குப் போய் அக்கவுண்டை Nil Balance க்கு கொண்டு வரலாம்கிற நம்பிக்கை நம்ம மக்கள் கிட்டே சூப்பரா பதிஞ்ச்சி போச்சு...
சமீபத்திய பிரதோஷம் அன்று அரக்கோணத்தில் இருந்தேன். கோவில் பக்கம் தலை காட்டப் போனா.. அது ஏதோ மகளிர் மாநாடே நடக்கிற மாதிரி... எங்கும் மகளிர் மயம்.. இரு பாலரும் வழிபட்ட பூஜை சமீப காலமா எப்படி மகளிர்க்கு போச்சி???. இதுவும் சமீபத்திய மாற்றம் தான்..
வேண்டுதலில் பல ரகம்... பலர் கோவிலுக்கு போய் சாமி கிட்டே அகிரிமெண்டே போடுவாங்க... ஆனா ஒண்ணு... சொன்னதே கரெக்ட்டா செஞ்ச்சிடுவாய்ங்க.. இல்லாட்டி சாமி கண்ணு குத்திடாது??? அந்த பயம் மட்டும் தான் அந்த காலம் தொட்டு மாறாம இருக்கு.
ஆசாமி சாமியிடம் வேண்டுவது இப்படின்னா...
ஓர் ஆசாமி..ஆசாமியிடம் வேண்டுவது பத்தி கொஞ்சம் பாக்கலாமா??
இதுவும் ஒரு பாசமலர் கதை தான்.. எந்த அண்ணன் தங்கை கதையாய் இருந்தாலுமே..அண்ணன் தங்கையிடம் ஏதாவது வேணுமான்னு கேக்கும். அதுக்கு ஒன்னோட பாசம் தான் பெருசு.. வேறு ஒண்ணுமே வேணாம்கிற மாதிரி வரும்.
ஆனா ஒரு சேஞ்சுக்கு வித்தியாசமாய் தங்கை கேட்கும் இடம் வருது... கேக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் பிட்டு வேறே போடுது...
அண்ணா பெருசா உள்ளதை நீ வச்சிக்க... இத்துனூண்டா உள்ளதே எனக்குக் குடு..
இந்த உலகமாதா பெரிய்ய தாதா மாதிரி ஒரு பெரிய்யய பெல்ட் பொட்டிருக்காம்.. அது தான் கடலாம். பெல்ட்ன்னு சொன்னா கொஞ்சம் டிசைன் வேணுமே... இருக்கே..அதான் மீன்.
அது சரி..திடீர்னு உலகம் எதுக்கு?? அந்த உலகமே அன்னாந்து பாக்கிற ஒரு சங்கதி...ஒரு பெண்.. அவளோட முடிகூட தள்ளாடுமாம்... ஏன் தெரியுமா?? அவ பூ வச்சிருக்கா... பூ தேன் வச்சிருக்கு... அதிலிருந்து தேன் வடிஞ்சி அதை அந்த முடி சாப்புட்டு போதையில ஆடுதாம்...
அப்புறம் வழக்கம் போல் சின்ன இடை... அந்த மான் மாதிரி அழகி... அவளை நீ வச்சி விளையாடு.
ஆனா அவ கூட ஒரு பொடியன் இருகான்... நீ தான் வீரனாச்சே ... நீ வீரன்னு எனக்கு தெரியும். உலகம் தெரிஞ்சிக்க வேணாமா??? அந்தப் பொடியனைப் பிடிச்சி எனக்கு விளையாடக் குடு.
கேட்ட அந்த பாசக்காரப் பயலுக யார் தெரியுமா??
சூர்ப்பநகை யும் இராவணனும் தான்.
சீதை & ராமனைக் குறித்து தான் கேட்டது என்று தெரிஞ்ச்சிருக்குமே..
இதோ கம்பரின் வரிகள்:
மீன் கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்த
தேன் கொண்டு ஊடாடு கூந்தல் சிற்றிடை சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடு நீ உன் வான் வலி உலகம் காண
யான் கொண்டு ஊடாடும் வண்ணம் இராமனைத் தருதி என்பால்.
இந்தியா முழுக்க லோக் பால் பத்தி யோசிக்க.. நானு இந்த என்பால் பத்தி யோசிக்கிறேன்...
மீண்டும் வருகிறேன்.
கார்த்திக் கையில் திருடின ஒரு உண்டியல். சாமி முன்னாடி விபூதி வச்சி ஒரு வட்டம் போடுவார். உண்டியல் காசெல்லாம் தூக்கி போட்டு, வட்டத்துக்குள் விழும் காசு எல்லாம் சாமிக்கு. மிச்சம் மீதி கொஞ்ச்சமா ஏதோ இருந்தா ..அது எனக்கு..என்பார் கார்த்திக்...
அதுக்கு பதிலுக்கு... ரமேஷ், சாமி .. உன்னையெல்லாம் ஒரு வட்டத்துக்குளே கொண்டு வர நான் விரும்பல்லே.. நானு எல்லாத்தையும் தூக்கி போட்றேன். உனக்கு வேணும்கிற எல்லாத்தையும் எடுத்துக்க.. எனக்கு ஏதோ கொஞ்ச்சம் குடு என்பார்..
சாமியை ஆசாமிகள் படுத்தும் பாடு.... படாத பாடு தான்.
சமீப காலமா கோவில் குளங்க்களில் கூட்டம் அதிகமா தென்படுது.. அதுவும் சிறப்பு பூஜைளில் சனி பகவான், குரு பகவான் இத்யாதி பூஜைகள் இன்னும் தடபுடலா நடக்குது.. வழிபாடுகளை விட பிராயசித்த தலங்கள் தான் இப்போ ரொம்ப பாப்புலர்.
என்ன வென்னாலும் தப்பு பன்னலாம். காசிக்குப் போய் அக்கவுண்டை Nil Balance க்கு கொண்டு வரலாம்கிற நம்பிக்கை நம்ம மக்கள் கிட்டே சூப்பரா பதிஞ்ச்சி போச்சு...
சமீபத்திய பிரதோஷம் அன்று அரக்கோணத்தில் இருந்தேன். கோவில் பக்கம் தலை காட்டப் போனா.. அது ஏதோ மகளிர் மாநாடே நடக்கிற மாதிரி... எங்கும் மகளிர் மயம்.. இரு பாலரும் வழிபட்ட பூஜை சமீப காலமா எப்படி மகளிர்க்கு போச்சி???. இதுவும் சமீபத்திய மாற்றம் தான்..
வேண்டுதலில் பல ரகம்... பலர் கோவிலுக்கு போய் சாமி கிட்டே அகிரிமெண்டே போடுவாங்க... ஆனா ஒண்ணு... சொன்னதே கரெக்ட்டா செஞ்ச்சிடுவாய்ங்க.. இல்லாட்டி சாமி கண்ணு குத்திடாது??? அந்த பயம் மட்டும் தான் அந்த காலம் தொட்டு மாறாம இருக்கு.
ஆசாமி சாமியிடம் வேண்டுவது இப்படின்னா...
ஓர் ஆசாமி..ஆசாமியிடம் வேண்டுவது பத்தி கொஞ்சம் பாக்கலாமா??
இதுவும் ஒரு பாசமலர் கதை தான்.. எந்த அண்ணன் தங்கை கதையாய் இருந்தாலுமே..அண்ணன் தங்கையிடம் ஏதாவது வேணுமான்னு கேக்கும். அதுக்கு ஒன்னோட பாசம் தான் பெருசு.. வேறு ஒண்ணுமே வேணாம்கிற மாதிரி வரும்.
ஆனா ஒரு சேஞ்சுக்கு வித்தியாசமாய் தங்கை கேட்கும் இடம் வருது... கேக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் பிட்டு வேறே போடுது...
அண்ணா பெருசா உள்ளதை நீ வச்சிக்க... இத்துனூண்டா உள்ளதே எனக்குக் குடு..
இந்த உலகமாதா பெரிய்ய தாதா மாதிரி ஒரு பெரிய்யய பெல்ட் பொட்டிருக்காம்.. அது தான் கடலாம். பெல்ட்ன்னு சொன்னா கொஞ்சம் டிசைன் வேணுமே... இருக்கே..அதான் மீன்.
அது சரி..திடீர்னு உலகம் எதுக்கு?? அந்த உலகமே அன்னாந்து பாக்கிற ஒரு சங்கதி...ஒரு பெண்.. அவளோட முடிகூட தள்ளாடுமாம்... ஏன் தெரியுமா?? அவ பூ வச்சிருக்கா... பூ தேன் வச்சிருக்கு... அதிலிருந்து தேன் வடிஞ்சி அதை அந்த முடி சாப்புட்டு போதையில ஆடுதாம்...
அப்புறம் வழக்கம் போல் சின்ன இடை... அந்த மான் மாதிரி அழகி... அவளை நீ வச்சி விளையாடு.
ஆனா அவ கூட ஒரு பொடியன் இருகான்... நீ தான் வீரனாச்சே ... நீ வீரன்னு எனக்கு தெரியும். உலகம் தெரிஞ்சிக்க வேணாமா??? அந்தப் பொடியனைப் பிடிச்சி எனக்கு விளையாடக் குடு.
கேட்ட அந்த பாசக்காரப் பயலுக யார் தெரியுமா??
சூர்ப்பநகை யும் இராவணனும் தான்.
சீதை & ராமனைக் குறித்து தான் கேட்டது என்று தெரிஞ்ச்சிருக்குமே..
இதோ கம்பரின் வரிகள்:
மீன் கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்த
தேன் கொண்டு ஊடாடு கூந்தல் சிற்றிடை சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடு நீ உன் வான் வலி உலகம் காண
யான் கொண்டு ஊடாடும் வண்ணம் இராமனைத் தருதி என்பால்.
இந்தியா முழுக்க லோக் பால் பத்தி யோசிக்க.. நானு இந்த என்பால் பத்தி யோசிக்கிறேன்...
மீண்டும் வருகிறேன்.
குத்து வசனம் .... பஞ்ச்.டயலாக்...
சாதாரனமாக வசனம் என்று பேசப்பட்ட ஒரு சங்கதி இப்போது பஞ்ச்...டயலாக் குத்து வசனமாக மாறி விட்டது. அந்தக் காலத்துலெயும் இந்த மாதிரி குத்து வசனங்கள் இருக்கத்தான் செஞ்சது.
ஓடினாள் ஓடினாள்...இப்படி யாராவது ஆரம்பித்தால், வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்று கண்டிப்பா யாராவது முடித்து விடுவார்கள்.. அந்த அளவுக்கு பாப்புலரான வசனம் அது.
சபாஷ் சரியான போட்டி என்பது இந்த ரகம் தான்.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்... நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி... சிங்கம் சிங்கிளா வரும் போன்றவை ரஜினி மூலம் பிரபலமான குத்து வசனங்கள்.
இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம் என்று ஒரு அசத்தல் காமெடி படம் ... அதில் ஓர் ஆதிவாசி பெண் கல்யாணம் வரும். கல்யாணத்தின் பிறகு கலங்கி ஒரு டயலாக் வரும். அதை ஆதிவாசி மொழி தெரிந்தவர் மொழி பெயர்ப்பார்.
முதல் மொழிபெயர்ப்பு இப்படி வரும்: "நான் என் கண்ணையே ஒங்கிட்டே ஒப்படைக்கிறேன்"அடுத்த வரியை மொழிபெயர்த்து சொல்லும் முன்...அது எனக்கு தெரியும் "அதுல நான் எப்போவும் ஆனந்தக் கண்ணீரைத்தான் பாக்கனும்" என்று முடிப்பார்.
அட... ஆதிவாசி பாஷை தெரியுமா?? என்று முழிப்பாய்ங்க...
இந்த காலத்து வாண்டுக கூட இந்த டயலாக்கை பிச்சி உதற்றாங்க... சமீபத்தில் என்னோட பொண்ணை போர்டிங்க் ஹாஸ்டல்லே சேத்துட்டு வரும் போது... அங்கே ஹாஸ்டலில் இருக்கும் வாண்டுகள் "அங்கிள்...உங்க கண்ணை எங்க கிட்டே குடுத்திட்டீங்க... நாங்க அதுலே ஆனந்தக் கண்னீர் வர்ர மாதிரி பாத்துக்குவோம்" னு தூள் கிளப்புறாய்ங்க... என்னத்தே சொல்ல...
இன்னும் இதே மாதிரி பாப்புலரான ஒரு சூப்பர் டயலாக் இருக்கு...."போகனுன்னு தான் தோன்றது..ஆனா எங்கே போவனும்னு தோணலையே....நேக்கு யாரைத்தெரியும்..."
சென்னைக்குப் போய் லோல் படுவதற்கு முன்னால் விவேக் ஒரு படத்தில் அடிக்கும் டயலாக் ஒன்று...வீட்டை விட்டு போகும்படி சென்னவுடன்...அழுத முகமா வச்சிட்டு.."அப்படி மட்டும் சொல்லிடாதீங்க...எனக்கு யாரைத் தெரியும்????..."... திடீர்னு குரல் மாத்தி..."அப்படி மட்டும் சொல்லுவேன்னு பாக்காதீங்க...சென்னைக்கு போறென்...." என்று வரும்...
ஏதாவது ஏடாகூடமாகவோ... அல்லது நல்லதோ சொல்லி விட்டு...இப்படி எல்லாம் இல்லை என்று சொல்லும் வித்தையில் விவேக் கலக்குவார்...
அது சரி... கொஞ்சம் இருங்க... பேஸ் புக்கில் ஒரு போஸ்ட் வந்திருக்கு பாத்திட்டு வர்ரேன்...
அடடே... கம்பர் ஒரு போஸ்ட் செஞ்ச்சிருக்கார்... ஓ கே... இந்த விவேக் மேட்டரையும் கம்பர்கிட்டே கேக்கலாமே... இந்த சித்து விளையாட்டை அவர் செஞ்ச்சிருக்க மாட்டாரா என்ன???
கேட்டவுடன் பதில் வந்தது... கம்பன்ன்ன்டா....
இராவணனுக்கு ஏதாவது ஆப்பு வைக்கனும்னா...அது யாரால முடியும்?? இது கேள்வி.
பதிலுக்கு கம்பர் சொல்லும் பதில் என்ன தெரியுமா???
புலித்தோலை சர்ட் மாதிரி மாட்டியிருக்கும் சிவன்
பீதாம்பரம்..அதுவும் பொன்னாலானது...ஆடையா வச்சிருக்கும் விஷ்ணு..
தாமரைப் பூவில் குந்தியிருக்கும் பிரம்மன்
இவங்களால் தான் ஆப்பு வைக்க முடியும்...என்னு நெனைச்சா...அது தான் இல்லை.
கம்பர் பண்ற சேட்டை பாத்தீங்களா???
பாட்டும் பாக்கலாமா??
புலியின் அதன் உடையானும் பொன்னாடை
புனைந்தானும் பூவினானும்
நலியும் வலத்தார் அல்லர்;
இந்த அல்லர் இல்லாம படிச்சா... வேற அர்த்தம்...அதோடு படிச்சா வேறு ஒரு அர்த்தம்...
கம்பர் கூட அந்த காலத்தில் விவேக் மாதிரி காமெடி செஞ்ச்சிருக்காரே...
இன்னும் தேடுவேன்...
ஓடினாள் ஓடினாள்...இப்படி யாராவது ஆரம்பித்தால், வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்று கண்டிப்பா யாராவது முடித்து விடுவார்கள்.. அந்த அளவுக்கு பாப்புலரான வசனம் அது.
சபாஷ் சரியான போட்டி என்பது இந்த ரகம் தான்.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்... நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி... சிங்கம் சிங்கிளா வரும் போன்றவை ரஜினி மூலம் பிரபலமான குத்து வசனங்கள்.
இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம் என்று ஒரு அசத்தல் காமெடி படம் ... அதில் ஓர் ஆதிவாசி பெண் கல்யாணம் வரும். கல்யாணத்தின் பிறகு கலங்கி ஒரு டயலாக் வரும். அதை ஆதிவாசி மொழி தெரிந்தவர் மொழி பெயர்ப்பார்.
முதல் மொழிபெயர்ப்பு இப்படி வரும்: "நான் என் கண்ணையே ஒங்கிட்டே ஒப்படைக்கிறேன்"அடுத்த வரியை மொழிபெயர்த்து சொல்லும் முன்...அது எனக்கு தெரியும் "அதுல நான் எப்போவும் ஆனந்தக் கண்ணீரைத்தான் பாக்கனும்" என்று முடிப்பார்.
அட... ஆதிவாசி பாஷை தெரியுமா?? என்று முழிப்பாய்ங்க...
இந்த காலத்து வாண்டுக கூட இந்த டயலாக்கை பிச்சி உதற்றாங்க... சமீபத்தில் என்னோட பொண்ணை போர்டிங்க் ஹாஸ்டல்லே சேத்துட்டு வரும் போது... அங்கே ஹாஸ்டலில் இருக்கும் வாண்டுகள் "அங்கிள்...உங்க கண்ணை எங்க கிட்டே குடுத்திட்டீங்க... நாங்க அதுலே ஆனந்தக் கண்னீர் வர்ர மாதிரி பாத்துக்குவோம்" னு தூள் கிளப்புறாய்ங்க... என்னத்தே சொல்ல...
இன்னும் இதே மாதிரி பாப்புலரான ஒரு சூப்பர் டயலாக் இருக்கு...."போகனுன்னு தான் தோன்றது..ஆனா எங்கே போவனும்னு தோணலையே....நேக்கு யாரைத்தெரியும்..."
சென்னைக்குப் போய் லோல் படுவதற்கு முன்னால் விவேக் ஒரு படத்தில் அடிக்கும் டயலாக் ஒன்று...வீட்டை விட்டு போகும்படி சென்னவுடன்...அழுத முகமா வச்சிட்டு.."அப்படி மட்டும் சொல்லிடாதீங்க...எனக்கு யாரைத் தெரியும்????..."... திடீர்னு குரல் மாத்தி..."அப்படி மட்டும் சொல்லுவேன்னு பாக்காதீங்க...சென்னைக்கு போறென்...." என்று வரும்...
ஏதாவது ஏடாகூடமாகவோ... அல்லது நல்லதோ சொல்லி விட்டு...இப்படி எல்லாம் இல்லை என்று சொல்லும் வித்தையில் விவேக் கலக்குவார்...
அது சரி... கொஞ்சம் இருங்க... பேஸ் புக்கில் ஒரு போஸ்ட் வந்திருக்கு பாத்திட்டு வர்ரேன்...
அடடே... கம்பர் ஒரு போஸ்ட் செஞ்ச்சிருக்கார்... ஓ கே... இந்த விவேக் மேட்டரையும் கம்பர்கிட்டே கேக்கலாமே... இந்த சித்து விளையாட்டை அவர் செஞ்ச்சிருக்க மாட்டாரா என்ன???
கேட்டவுடன் பதில் வந்தது... கம்பன்ன்ன்டா....
இராவணனுக்கு ஏதாவது ஆப்பு வைக்கனும்னா...அது யாரால முடியும்?? இது கேள்வி.
பதிலுக்கு கம்பர் சொல்லும் பதில் என்ன தெரியுமா???
புலித்தோலை சர்ட் மாதிரி மாட்டியிருக்கும் சிவன்
பீதாம்பரம்..அதுவும் பொன்னாலானது...ஆடையா வச்சிருக்கும் விஷ்ணு..
தாமரைப் பூவில் குந்தியிருக்கும் பிரம்மன்
இவங்களால் தான் ஆப்பு வைக்க முடியும்...என்னு நெனைச்சா...அது தான் இல்லை.
கம்பர் பண்ற சேட்டை பாத்தீங்களா???
பாட்டும் பாக்கலாமா??
புலியின் அதன் உடையானும் பொன்னாடை
புனைந்தானும் பூவினானும்
நலியும் வலத்தார் அல்லர்;
இந்த அல்லர் இல்லாம படிச்சா... வேற அர்த்தம்...அதோடு படிச்சா வேறு ஒரு அர்த்தம்...
கம்பர் கூட அந்த காலத்தில் விவேக் மாதிரி காமெடி செஞ்ச்சிருக்காரே...
இன்னும் தேடுவேன்...
Subscribe to:
Posts (Atom)