சில வார்த்தைகளும் வாக்கியங்களும் சர்வ சாதாரணமா நாம யூஸ் பன்றோம். ஆனா அதோட மீனிங்கே வேறெ ஏதாவதா இருக்கும்.
கிளாஸ்லே அந்த வாத்தி அறுத்துத் தள்ளுதுன்னு எத்தனை பேரை நாம சொல்லி இருக்கோம்?. அறுத்தலுக்கும் வகுப்பு எடுக்கிறதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா என்ன ??
மதுரையில் சமீப காலமாய் புழங்கும் வாசகம் “சான்ஸ்ஸே இல்லை” என்பது. ரொம்பவும் சூப்பரா இருந்தா இப்படி சொல்கிறார்களாம். என் நண்பர் கார்த்திக் பாபு நாலு வருஷமா அமெரிக்காவில் இருந்தும் இந்த தொடர் அவரை விடவில்லை.. (கல்யாணம் ஆகியும் திருந்தாத / மண் மணம் கெடாத ஒருவர்)
தினத்தந்தியில் “சம்பவ” இடத்திற்கு போலீஸ் வந்தது என்று போடுவர். சம்பவம் என்றால் கொலை கொள்ளை கற்பழிப்பு துர்மரணம் விபத்து இப்படி எல்லாம் சேர்ந்தது. அபூர்வ சகோதர்கள் படத்திற்குப் பிறகு சம்பவம் என்றால் “கொலை” என்றாகி விட்டது.
சுவாமி வடிவேலானந்தா வின் சமீபத்திய அருள் வாக்கு என்ன தெரியுமா?? அதுக்கு முன்னாடி கொஞ்சம் ஒரு நண்பரை வம்புக்கு இழுத்துட்டு அப்புறம் தொடர்வோம்.
ஒரு நண்பர் நம்ம எல்லாரையும் ஒரு நல்ல பங்க்சனுக்கு இன்வைட் பன்னிட்டாரு. குடும்பத்தோட வரனும்னு ஏகமாய் தொந்திரவு வேறெ…
என் வீட்டுக்காரி நாலு புடவை எடுத்து வச்சி..என்னங்க.. இதிலெ நல்ல புடவையா சொல்லுங்க.. நீங்க சொல்ற சாய்ஸ் தான் என்னோடது – ன்னு கொஞ்ச்சலாய்.
ஆஹா .. மனைவியிடம் நல்ல பேரு வாங்க ஒரு நல்ல சந்தர்ப்பம்… ரொம்ப சிரமப்பட்டு மூளையை கசக்கி.. நல்ல சேலையை செலெக்ட் செய்தேன்..
மனைவியோ.. என்னங்க இது, இதே கலர் மாதிரி பொடவை தான் ரீயூனியன்லே கட்டிகிட்டு திருமதி ஜெயராம் கிட்டெ பேசி இருக்கேன்.. வேறெ ஏதவது சாய்ஸ் ப்ளீஸ்..
சரி.. ரொம்ப யோசிக்காம, இரண்டாவது புடவை கை காட்டினேன்.
என்னங்க மறுபடியும்…. இதை கட்டிகிட்டா இன்னும் கொஞ்ச குண்டா தெரிவேன்.. இது வேண்டாமே..
அடுத்த தெரிவு.. மூனாவது புடவை…
மறுபடியும் தப்பு பன்னிட்டீங்களே… இதிலெ கொஞ்ச கருப்பு கலர் மிக்ஸ் ஆயிருக்கு பாத்தீகளா??? (எனக்கு சுத்தமா அப்படி ஒன்னும் தெரியலை..) நண்பரண்ணா ஆத்துக்கு அதை கட்டிண்டு போனா நன்னாவா இருக்கும்?
அடுத்து மிச்சம் இருக்கும் நான்காவது புடவை எடுத்து கையில் கொடுத்தேன்.
திருமதி ரொம்ப சந்தோஷம்.. இந்த தடவை உங்க சாய்ஸ் தான் பொடவை கட்டறேன்..
நான் மனசுக்குள் வடிவேலை வேண்டினேன்.... “நீ ஆணியே புடுங்க வேணாம்” என்ற அருள் வார்த்தை கிடைத்தது.
ஒரு வேலையையும் செய்யாமெ சும்மா இருக்கச் சொல்லனுமா “நீ ஆணியே புடுங்க வேணாம்” என்பதை இனி பயன் அடுத்தலாம் என்று வல்காப்பியன் சொல்லிவிட்டார்.
இதே போல் கொன்னுட்டான்யா என்பதும் சரளமாய் பயன்படுத்தப்படும் வாக்கியங்கள்…
கம்பனுக்கும் இந்த சிச்சுவேஷன் கிடைக்குது…
சீதையை பாத்து ராமன் காதலில் புலம்பும் காட்சி.. நீ எமனா வந்து என்னை கொண்ணுட்டே… மறுபடியும் அல்குல், கண்கள், மார்புகள், புன்னகை இதெல்லாம் வச்சி மறுபடியும் கொல்லனுமா என்ன???
வண்ண மேகலைத் தேர் ஒன்று வாள் நெடுங்
கண் இரண்டு கதிர் முலைதாம் இரண்டு
உண்ண வந்த நகையும் என்று ஒன்று உண்டால்
எண்ணும் கூற்றினுக்கு இத்தனை வேண்டுமோ.
உண்மையில் கம்பன் கொண்ணுட்டான்… சான்ஸ்ஸே இல்லை. இந்த ஒரு சம்பவம் ஒன்னு போதும்.. இனி எந்த ஆணியும் புடுங்க வேண்டாம்.
இலக்கியத் தேடல் வளரும்…
No comments:
Post a Comment