உலகம் உருண்டை இல்லை என்று நம்பி வந்த காலத்தில் கொஞ்சம் மாத்தி யோசிச்ச விஞ்ஞானிக்கு நடந்த கதை தெரியுமா உங்களுக்கு??
மாத்தி யோசிங்க... மாத்தி யோசிங்கன்னு மாஞ்சி மாஞ்சி எழுதுறோம்.. ஆனா அதில் உள்ள சிக்கல் பத்தி யாராவது எழுதி வைக்கிறோமா??
அதே மாதிரி இன்னொருவர் ஸ்டீவன்சன்
.. மாட்டுவண்டி குதிரை வண்டி மட்டும் ஓடிய காலத்தில், ரயில் ஓட்டி காட்டலாம் என்று புறப்பட்டார். இவ்வளவு வேகத்தில் (அந்தக் காலத்தில் போன வேகம் தான்) போகும் வண்டியில் ஏறிப் போனால் மரை கலண்டு போவும். இதெல்லாம் சரிப்படாது என்று reject செய்யப்பட்டது அந்த மாத்தி யோசிச்ச யோசனை. அப்புறம் அந்த மனுஷன் சரி..நானே ஏறி வந்து காமிக்கிறேன்... நான் என்ன லூசா என்றாராம்.
ஆமாம்
..நீ லூசு தான். அதான் இப்படியெல்லாம் திறிரியரே என்றார்களாம் சுடச்சுட. அவரை ஒரு பஞ்சாயத்தில் வைத்து விசாரித்தார்களாம். வெளிய வந்த அவரை ஆஜ்தக் ரிப்போர்ட்டர் மாதிரி ஒருவர் மடக்கி கேள்வி கேட்டார்.. அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?? தங்கள் வீட்டிற்கு வெளியில் அன்னா ஆதரவாளர்கள் மத்தியில் சிக்கிய நபர் மாதிரி நின்றேன் என்றாராம்.
ஆக மாத்தி யோசிப்பதில் சிக்கல் இருக்கத்தான் செய்யுது
.
அவனவன்
Sattelite Phone வைத்து குண்டு வைத்து வரும் இந்தக் காலத்தில் உண்ணாவிரதம் இருந்து லோக்பால் என்பதை ஜன் லோக்பாலாய் ஆக்குவேன் என்று இருப்பவரும் இந்த மாத்தி யோசிக்கும் மாமு தான். என்ன ... இதற்குள் 41/2 கிலோ இந்திய நவீன காந்தி இளைத்துவிட்டது.
உடம்பு இளைக்க எவ்வளவோ செய்யும்
(செய்ய வைக்கும் விளம்பரங்களையும் சேர்த்துத்தான்) ஆசாமிகள்.. இந்த உண்ணாவிரத கலையை கற்கலாம். வேணும்னா விரதம், உபவாசம், ரோஜா, அன்னாவுக்கு ஆதரவு இப்படி எப்படி வேணும்னாலும் மாத்தி பேரு வச்சிக்கலாம்.. எப்படி என் மாத்தி யோசிக்கும் ஐடியா???
ஒரு வாரம் முன்பு தகவல் அறியும் உரிமை
IAS IPS என்று ஆரம்பித்து Director, Asst secretary என்று பெரும் தலைகளுக்கு நான் வகுப்பு எடுக்க ஆரம்பித்தேன். காலை மாலை 2 மணி நேரம் என்று வைத்து மூன்று நாட்கள் என் மூளையும் முட்டியும் பிதுங்கிய நாட்கள் அவை. கால் கடுக்க நிற்பது என்பது அப்போது தான் என்ன என்று விளங்கியது. (அந்த வலி ஏன் வீடு வந்த பிறகு மட்டுமே தெரிகிறது..அப்போதே தெரியாமல்???) மணிக்கு தோதாக 87 ஸ்லைட் காட்டி, 1/2 மணி நேரம் சந்தேகங்களைத் தீர்க்க ஏற்பாடு. நன்றி சொல்லும் ஸ்லைடுக்கு முன் ஏதாவது மாத்தி யோசிச்சா எப்படீன்னு சேக்ஸ்பியர் சொன்ன ஒரு விஷயத்தையும், RTI சமாச்சாரத்தையும் கலந்து கொடுத்தேன். மேட்டர் இது தான்:
கூடவே என்னுடைய பன்ச்
: If you want to be happy with Government Service, Love RTI more & Understand RTI more.
மாத்தி யோசிக்க நான் சொன்ன இந்த ஸ்லைட் எல்லா பேட்சிலும் செம ஹிட்
அப்போ நான் மட்டும் தானா மாத்தி யோசிப்பேன்..?? மத்தவங்க அப்படி செய்ய மாட்டாங்க்களா என்ன??
... 86 ஸ்லைடுகளை மாங்கு மாங்குன்னு தயார் செஞ்சதை யாரும் நோட் செய்யலை. இந்த ஸ்லைடை மட்டும் திரும்ப கேட்டு எழுதிக் கொண்டனர்...
சினிமா காமெடிகள் எதுக்கும் சளைத்தது அல்ல
100
.அடி 500 அடி என்று தோண்டினால் தான் தண்ணியே வரும் இந்த யுகத்தில்... கிரிக்கெட் பேட்டை தட்டி தண்ணி வரவழைப்பதாய் ஒரு காமெடி வருமே...அதான் சத்யராஜும் வடிவேலும் கலக்கும் சீன் தான் நான் சொல்வது. இது மா........த்தி யோசிப்பதின் உச்சமாய் இருக்குமோ??
ஆனா அந்த குழி ஆகும் சங்கதி என்னமோ சுட்ட சரக்கு மாதிரி தெரியுது
. எங்கே தெரியுமா??
கம்பராமாயணம்
களம் தான், கிரிக்கெட் இல்லை.. அது ஒரு கிச்சன் கேபினெட்.
கைகேயி, இராமன் பட்டத்துக்கு வருவதை அறிந்து சந்தோஷமாய் இருந்த காலம் அது. வில்லி இன்னும் வரவில்லை. இதோ வந்து விட்டாள். ஒரு மாலையை அந்த வில்லிக்கு அதான்... கூனிக்கு தந்தாள் கைகேயி. கூனியோ.. கோபமா சத்தம் போட்டா...எரிக்கிற மாதிரி பாத்து அதட்டினா...திட்டினா..ஆடை & அணிகள் ரெண்டையும் அலங்கோலம் ஆக்கிகிட்டா.. வாய் விட்டு அழுதா..கைகேயி குடுத்த மாலையை தூக்கி எறிஞ்சா... அது விழுந்த எடம் "குழியே" ஆயிடுச்சாம்...
.
தெழிந்தனள் உரப்பினள் சிறு கண் தீ உக
விழித்தனள் வைதனள் வெய்து உயித்தனள்
அழித்தனள் அழுதனள் அம் பொன் மாலையால்
குழித்தனள் நிலத்தை அக் கொடிய கூனியே
.
ஆக
... இந்த குழி ஆகும் சமாச்சாரத்தின் விரிவாக்கம் தான் அந்த வடிவேல் கிரிக்கெட் காமெடியா இருக்குமோ??
இன்னும் படிக்கனும் நிறைய
.
11/2
If you want to be happy with man Love him less and understand him more. If yu want to happy with women lLove her more and never try to understand her.
(Right to Information - RTI பற்றிய பயிலரங்கம் ஏற்பாடு ஆனது. (அன்னாவும் அர்விந்த் கெஜிர்வாலும் தான் இந்த RTI க்குப் பின்னால் இருந்தவர்கள் என்பது உங்க்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்). அந்தமானில் நான் தான் RTI க்கு Resource Person. சம்பந்தப்பட்ட துறையின் செயலர் என்னை அழைத்து, தகவல் தரும் அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் என்றால் என்ன என்பதை சொல்ல வேண்டும் அது தான் உங்க வேலை என்றார். நாகரீகமாய் சொன்னதின் முழு அர்த்தம் என்ன வென்றால், இங்கே யாருக்கும் ஒண்ணும் தெரியலை..நீங்க முழுசா சொல்லிக் கொடுங்க என்பது தான்.
No comments:
Post a Comment